கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வு.


இடமாற்றம் பெற்று செல்லும் உத்தியோகத்தர் களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்றைய தினம் கல்முனை காணி மாவட்ட பதிவக நலன் புரி அமையத்தின் தலைவர் மேலதிக காணி பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளருமான கே.சிவதர்ஷன் தலைமையில் நடைபெற்றது.

இடமாற்றலாகி செல்லும் காணி மாவட்ட பதிவகத்தில் கடமையாற்றிய பிரதம முகாமைத்துவ உதவியாளர் மு.விவேகானந்தராஜா, முகாமைத்துவ உதவியாளர் திருமதி ம.லிங்கேஸ்வரராஜா மற்றும் அலுவலக உதவியாளர் மு.சம்ரிக்‌ஷானி ஆகியோரின் பிரியாவிடை நிகழ்வு அலுவலக உத்தியோகத்தர் பங்களிப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதானியாக கல்முனை காணி மாவட்ட பதிவக காணி பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளருமான ஜமால் முஹம்மட் கலந்து கொண்டு, சிறப்பு உரையும் ஆற்றினார்.