மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் எதிர் வரும் 24ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தின் போது மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயப் படுவதோடு கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற ஆய்வுகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்படும். இத்துடன் இவ் ஆண்டுக்கான புதிய திட்ட முன்மொழிவுகளும் இவ்வாண்டிலே ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்களும் ஆராயப்பட்டு அது உரிய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக தவிசாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கருத்துக்களை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.