நாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்கு தளபாடங்கள் கையளித்தலும் கொரோனா நோய்யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரார்த்னையும் !


(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு)
நாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்கு தளபாடங்கள் கையளித்தலும் கொரோனா நோய்யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரார்த்னையும்அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் ஊடாக நடாத்தப்படும் நாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்காக தளபாடங்கள் கையளித்தலும் சீனா உட்பட உலக நாடுகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் சுகம் பெற வேண்டி பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண.இராஜரெத்தினம் அவர்களின் தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் ஆதீன ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்று இருந்தன.

இதன்போது திருநாவுக்கரசு நாயனார் குருகுல நிருவாகத்தினரால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட பூஜை ஒன்றும் பிரார்த்தனையும்; இடம்பெற்றதுடன் விநாயகபுரம் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர சர்மாவினால் பூஜைகள் இடம்பெற்று இருந்தன.

இதனைத் தொடர்ந்து நாவுக்கரசர் முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கான தளபாடங்கள் திருக்கோவில் பிரதேச சபையின் உறுப்பினர் கே.காந்தரூபனின் வேண்டு கோளுக்கு இனங்க திருக்கோவில் பிரதேச சபையின் 40ஆயிரம் ரூபா நிதியின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் சபை உறுப்பினர்களான கே.காந்தரூபன் கே தவலோகநாதன் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.