சிசுக்கள் சடலமாக மீட்பு !

(பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்)
நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து இறந்த நிலையில் பெண்சிசு இரண்டு சடலம் நுவரெலியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 18.02.2020. செவ்வாய்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சிசுதொடர்பில் பொதுமக்கலால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர் இதேவேலை மீட்டெடுத்த சிசு தொடர்பில் தீவிர விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சிசுவின் தயார் தேடப்பட்டு வருவதாகவும் குறித்த சிசுவை கொலைசெய்தே இவ்வாறு வீசி எறிய பட்டிருக்கலாமென நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சிசுவின் தாயாரை தேடும் நடவடிக்கையினை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.