மட்டக்களப்பில் 04 மக்கள் வங்கி கிளைகள் இன்று திறந்திருக்கும் !

பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பில் 4 மக்கள் வங்கி கிளைகள் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு நகர கிளை, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, செங்கலடி, ஆகிய நான்கு மக்கள் வங்கி கிளைகளும் இன்று பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நடவடிக்கைகள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற அவர்கள் இந்த மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் .

இதன்போது பணக் கொடுக்கல் வாங்கல்கள்  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.