இலங்கையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமேகல பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (24) செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.



இதனையடுத்து  குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் காயமடைந்த நிலையில் காணப்பட்ட நபரை, வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர் இதன் பின்னர்  மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறிந்ந நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்