தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினர் வெளியேற்றம் !



தனிமைப்படுத்தும் நிலையங்களில் ஒரு குழுவினர் இன்று  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 57 பேரும் கந்தக்காடு நிலையத்திலிருந்து 144 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

201 நபர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

311 பேர் இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.