கொரோனா நோய் தாக்கம் விரைவில் குறைவடைய வேண்டி கல்முனை உப பிரதேச செயலக வளாகத்தில் விசேட பூஜை !

(பாறுக் ஷிஹான்)
வீரியம் அடைந்து வரும் கொரோனா நோய் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டி கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் விஷேட பூஜை வெள்ளிக்கிழமை (20) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு பூஜை வழிபாட்டை அடுத்து நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொது இடங்கள், மதஸ்தலங்களில் காட்சிப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

இதன் போது உயர் அதிகாரிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.