மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியல் கல்லூரி PGDE கற்கை பதிவு பிற்போடப்பட்டுள்ளது

(படுவான் பாலகன் )

பட்டப்பின் கல்வி டிப்ளோமா பதிவு நடவடிக்கை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை(21) நடைபெறவிருந்த பட்டப்பின் கல்வி டிப்ளோமா பதிவு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தாழங்குடா தேசியக் கல்வியல் கல்லூரியின் விரிரையாளர் ச.ஜெயராசா தெரிவித்தார்.


நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாளைய தினம்(21.03.2020) தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியற்சேவையில் உள்ளவர்களுக்காக நடைபெறவிருந்த பட்டப்பின் கல்வி டிப்ளோமா பதிவு நடவடிக்கைகளே மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த பதிவுநடவடிக்கைகள் தொடர்பில்இ பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.