திருகோணமலையில் சட்ட விரோத பீடி கடத்தல் முறியடிப்பு

(எப்.முபாரக்)
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முப்பதாயிரம் பீடிகளுடன் இருவரை இன்று(6) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய வாகனத்தின் சாரதியும்,உதவியாளரையும் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளையிலிருந்து மூதூருக்கு டிமோ ரக பட்டா ஒன்றில் முப்பதாயிரம் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட பீடிகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலே இவ்வாறு பீடிகளுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.