கணக்காளர் சங்கத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்ட கணக்காளர் சங்கத்தினால் அசாதாரண சூழ்நிலையால் பாதிப்புற்றிருக்கின்ற மக்களுக்கு இன்று(05) நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி, மகிழுர் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் ஒருதொகுதியினருக்கே இந்நிவாரண உதவி வழங்கி வைக்கப்பட்டது.


இதன் போது, ரூபா 1000ம் பெறுமதியான 170பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், கணக்காளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, அன்றாடம் தொழிலுக்கு சென்று குடும்பத்தினை வழிநடத்தும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனைக்கருத்தில் கொண்டு இந்நிவாரண உதவி வழங்கப்பட்டது.