குவைட்டில் இருந்து இலங்கைக்கு வந்த 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

(ஜே.எப்.காமிலா பேகம்)
குவைட்டிலிருந்து இலங்கை வந்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

குவைட் நாட்டில் தொழில்புரிந்த பல்வேறு வயதுகளை உடைய 437 பேர் கடந்த 19,20ஆம் திகதிகளில் இலங்கை வந்தனர்.

தொழில் புரியும் இடத்தில் தொழில் வழங்குநரிடம் இருந்து மற்றும் தொழில் செய்யும் பலரிடத்திலிருந்தும் தொற்று பரவியதால், வேலைநீக்கத்திற்கு தாங்கள் உள்ளாகியதாக இலங்கை வந்தவர்கள் பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை மங்கி பே, கிலபண்டன் மற்றும் மின்னேரிய ஐ.சி.டி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.