வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக இருக்கவும்: அரச அச்சக திணைக்களத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

(ஜே.எப். காமிலா பேகம்)
பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கும்படி அரச அச்சக திணைக்களத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் பணிகளை ஆரம்பிப்பதாக அச்சக திணைக்களம் கூறியுள்ளது.

அத்தோடு வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளுக்கு 15 தொடக்கம் 20 நாட்கள் வரை செல்லும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிடுகிறது.