கந்தளாய் சேருவில பிரதான வீதியில் டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்து:இருவர் காயம்


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் சேருவில பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடைய இருவரே கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயில் இருந்து சேருவிலவிற்கு சென்ற முச்சக்கர வண்டியும், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.