ஆபிரிக்க நாடுகளில் தொழில் புரிந்த 230 க்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் தொழில் புரிந்த 230 க்கும் அதிகமான இலங்கையர்கள் எத்தியோப்பியாவில் இருந்து இன்று(06) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தொழிலுக்காக சென்று எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இவர்கள் விசேட போக்குவரத்து சேவையின் மூலம் அபாபா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1710 விமானத்தில் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு வருகைத்தந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.