ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

கிரேண்பாஸ், முகத்துவாரம் பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று(05) இரவு 8.30 மணி அளவில் கொழும்பு வடக்கு ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 322 கிராம் 910 மில்லி கிராம் பெறுமதியான போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அவரிடம் இருந்து போதை பொருள் வியாபாரத்தின் ஊடாக சம்பாதித்தாக கருதப்படும் 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் 25 வயதான யுவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.