சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய தீமிதிப்பு சடங்கு !

(காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்புச்சடங்கு நேற்று 04ஆம் திகதி பூரணையன்று தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சுமார் 500 பக்தர்கள் தீமிதிப்பிலீடுபடுவதையும் பக்தர்கள் சூழவிருப்பதையும் காணலாம்.