மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தீ விபத்து!


(லியோன்)
மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலைய பகுதியில் இன்று நண்பகல் அளவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலைய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புனானை தனிமைப்படுத்தல் மத்திய பகுதியில் இன்று பிற்பகல் சிறு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கடமைபுரியும் இராணுவத்தினர் மற்றும் ஊழியர்களினால் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் குறித்த தீ விபத்து சம்பவத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என அங்கு கடமையில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர் .

குறித்த தீ விபத்து சம்பவம் மின்னொழுக்கு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில் குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு புனானை இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.