பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கென சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக 100 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட போக்குவுரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மேலதிக ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.