சுற்றிவளைப்பின்போது வாள் மற்றும் கத்திகளுடன் நபரொருவர் கைது!

சட்டவிரோத வாள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஒருதொகை கத்திகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கடுவலை பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் இதற்கு முன்னர் றோயல் பார்க் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டிருந்த நபரென பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.