கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை வியாபாரிமூலை பகுதியில் இன்று(15) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கணேசலிங்கம் நடேசலிங்கம் என்ற 39 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.