புற்று நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தூக்கிட்டு தற்கொலை - புதுக்குடியிருப்பில் சோகச் சம்பவம்


(ஷமி மண்டூர்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோயில் வீதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த கந்தப்போடி நடராசா (78) என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களான தொண்டை புற்று நோயினால் பாதிக்கப்பட்டுவந்த குறித்த நபர் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள மயானத்தில் உள்ள மரத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீண்ட காலங்களாாக தொண்டை புற்று நோய்யினால் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் இவர் இந்த முடிவினை எடுத்துள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.