அலறி விதை உண்ட குடும்பத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு



(ஷமி மண்டூர்)
சேதுனுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரநகர வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த சித்திராவி கந்தசாமி வயது 59 என்பவர் அலறி விதை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொவித்துள்ளனர்.

குறித்த நபர் நீண்ட காலங்களாக மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நண்பர்களுக்கு நெற்காணிகளை சம்பளத்திற்கு கண்காணித்து வந்ததாகவும் இவர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவரின் வாழ்நாட்களை கழித்து வந்திருந்த நிலையில் மனவிரக்தி காரணமாக உறவினர் ஒருவரின் வீட்டில் அலறி விதை உண்டிருந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் கடந்த (21)ம் திகதி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 22ம் திகதி மரணடடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேதுனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.