மோட்டார் சைக்கிள் - பேருந்துடன் மோதி விபத்து; இளைஞரொருவர் பலி!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று(15) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம்சதீஸ் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முன்னேசென்ற வாகனமொன்றை முந்திக்கொண்டு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முற்பட்டவேளையில், எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.