கப்பல் தீ விபத்து- சுற்று சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு

"MT New Diamond" கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தீ விபத்தினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதுடன், கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.