புதிய அதிபராக கடமையேற்ற சபேஸ்குமாருக்கு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் மகத்தான வரவேற்பு

(சகா)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடிக்கு புதிய அதிபராக தம்பிலுவிலைச் சேர்ந்த விஞ்ஞான
பட்டதாரியான முருகமூர்த்தி சபேஸ் குமார் கடந்த புதன் கிழமை கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அதிபருக்கு வியாழக்கிழமை பாடசாலை  பிரதிஅதிபர்களாலும் ஆசியர்களாலும் மாணவர்களாலும் கல்விசாரா
உத்தியோஸ்தர்களினாலும் மாலை அணிவிக்கப்பட்டு மகத்தான. வரவேற்பளிக்கப்பட்டது

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியாக இவர் அக்கரைப்பற்று வலய கல்வி பணிமனையில் உதவி கல்வி பணிப்பாளராக கடந்த காலங்களில் கடமை புரிந்தவர்.