விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி வெல்லாவெளி பிரதேசத்தில் அகழ்வு நடவடிக்கை


(மண்டூர் ஷமி)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் உள்ள நவகிரி வித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அதனைச்தேடும் நடவடிக்கையில் நேற்று (28) பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த யுத்த காலப்பகுதியில் இந்த பாடசாலை வளாகத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்ததனை தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், தொல் பொருள் திணைக்களத்தினர் இந்த ஆயுதங்களை கனகரக வாகனத்தினை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த யுத்த கால ப்பகுதியில் இப்பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து குறித்த பாடசாலை வளாகத்தில் அவர்கள் முகாமிட்டு இருந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கான அனுமதியினை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியினைப் பொலிஸார் பெற்று ஆயுதங்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் எந்த விதமான தடயங்களோ, ஆயுதங்களோ மீட்கப்படவில்லை.