இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வ பதவி ஏற்புகளை செய்த பின்னர் அரச தொழிலின் நியதிகள் சம்மந்தமாக விளக்கம் வழங்கினார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல்.பதிருத்தீன், நைட்டா நிறுவன பயிற்சி பொறுப்பாளர் எம்.டி அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.