சற்றுமுன் கோர விபத்து; தாய், மகன் பலி !

 


கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று (28) இரவு சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.