மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் 100 பேரிடம் இன்று(30) காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் கொரோனா பரிசோதனையின்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதாரவைத்தியதிகாரி டாக்டர் பி.கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற பரிசோதனையில் மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் எம்.குணரத்தினம் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒப்பாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சுமார் 20 நிமிடங்களில் கிடைத்து விடுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய சிறைக்கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4