அக்கரைப்பற்றில் மேலும் 13 பேருக்கு கொரோனா. ! கிழக்கில் 200 ஆக அதிகரிப்பு

(இரா .சயனொளிபவன்)
அக்கரைப்பற்றில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். 

இது வரை அக்கரைப்பற்றில் கொரோன தொற்றாளர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.  

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் - 96 
மட்டக்களப்பு - 88 
திருகோணமலை - 16
 
மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள 
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்