தம்பிலுவிலில் மேலும் இருவருக்கு கொரோனா

(இரா.சயனொளிபவன் )
தம்பிலுவிலில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

தம்பிலுவிலில் ஏற்கனவே கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புகளை  வைத்திருந்தவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் மேலும் இருவருக்கு இன்று கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 

இதே வேளை  அக்கரைப்பற்று அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்