அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேருக்கு கொரோனா !


(இரா.சயனொளிபவன் )

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது . 

தொற்றாளர்களில் அக்கரைப்பற்றிலயே  அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.   

 கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்றாளர்கள் விபரம் 
அக்கரைப்பற்று - 24 
திருக்கோவில் - 3 
தமன - 1

இதுவரை   கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவில் 99 பேரும்  அம்பாறை பிராந்திய சுகாதார பிரிவில் 11 பேரும்  கொரோனா  தொற்றுக்குள்ளாகியுள்ளனர் 

மேலும் pcr  பரிசோதனைகள் முடிவுகள் வெளிவரவுள்ளன . 
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களால் கிழக்கின் நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது

பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது 

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்