சந்தனம் நிறம் கொண்ட அரிய வகை மான் கண்டுபிடிப்பு

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த அரியவகை சந்தனம் நிறம் கொண்ட குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த சருகுமானை நிகவெரட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலகத்திற்குப் பொறுப்பான உதவி அதிகாரி சஞ்சீவ வீரசேகர தெரிவித்துள்ளார்.