மட்டக்களப்பு வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்பு!




மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (25) காலை கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைக்குண்டு மீட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.