ஏறாவூரைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணம்



ஏறாவூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பில் இன்று (03) அதிகாலை மரணமடைந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு கிழக்கு, முல்லேரியா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஏறாவூரில் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். ஏறாவூரைச் சேர்ந்த ஆணொருவர், (வயது 56) கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சனிக்கிழமை (27) அதிகாலை மரணமடைந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 8 மரணங்கள் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.