வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை ! ஒருவர் கைது !


(எஸ்.எம்.எம்.முர்ஷித் )
மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்;டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கணணிபயிற்சி நெறிக்கான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் ஆவணத்தயாரிப்பதற்கான மடிகணணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள்; என்பனவற்றை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.