நாட்டில் நேற்று மட்டும் 2,456 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!


நாட்டில் இன்றுமட்டும் 2,456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 145 202ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1 307 பேர் நேற்று  வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக 119 629 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 941ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 24 611 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 13 15 257 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை 269 512 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.