வாழைச்சேனை 32 அரச உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை!


(குகதர்சன்)
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முப்பத்தி இரண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ச்சியாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார், கல்குடா வலய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

இதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.