இரும்பு பொல்லால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்!


மஹரகம - பமுணுவ பிரதேசத்தில் நேற்று (16) மாலை குடும்ப தகராறு காரணமாக இரும்பால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த பெண் கணவனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன், சந்தேக நபரான கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணின் சடலம் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.