இலங்கையில் தமிழினவழிப்புக்கு எதிராக சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!



தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில் உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழீழத்தின் மீதான தொடரும் இனவழிப்பை சிறீலங்கா பௌத்த பேரினவாத இனவழிப்பு அரசாங்கமும் அதற்கு முண்டுகொடுத்து வரும் பன்னாட்டு வல்லாதிக்க சக்திகளும் மூடிமறைப்பதற்கான பல பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது. இத்தகையதொரு சூழலில் உலகத் தமிழர் இயக்கம் இவ்விடையத்தை பொதுசன வெளியில் எடுத்துச்செல்வதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனொரு கட்ட வேலைத்திட்டமாக இவ்விரு மாநிலங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ச்சியாக இவ்வாறன செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மினத்தின் நீதிக்கும் உரிமைக்குமான விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க அனைவரது ஆதரவையும் உலகத்தமிழர் இயக்கம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கிறது.