அரசாங்கத்தின் சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல்!


இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தற்போது இவை மீள சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற இந்த இணையவழி முடக்கம் குறித்து விமானப்படையின் இணையப் பாதுகாப்பு பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தகவல் வழங்கியதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேதிலக தெரிவித்தார்.