தேர்தல் முறையில் மாற்றம் – தெரிவுக்குழு கூட்டத்தில் அரசாங்கம் அறிவிப்பு !


தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஜனாதிபதி, நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைகளில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.