வாழைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது!


மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அதற்கமைய மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை சிலர் இன்று அனுஷ்டித்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நினைவு கூரலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

அதற்கமைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.