முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்த சமூக ஆர்வலர் குருசுமுத்து வி. லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரும் கைது!



(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்த குருசுமுத்து வி. லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரையும் கல்குடா பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இன்று அஞ்சலி செலுத்தினார். கிரான் கடற்கரையில் தனது காணி பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் கைதானார்.

கைதான விமலசேன லவக்குமார் அண்மையில் தனது சொந்த காணியை கிரான் பகுதியில் காணியற்றவர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாழைச்சேனை நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்ததமை குறிப்பிடத்தக்கது. கல்குடா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.