மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 27நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 27 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளது
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் குறைவடைந்துள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் எஸ்,ராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது