புதிதாக 642 பேருக்கு தொற்று!



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 642 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 87 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 416 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.