பிறந்து 06 நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம்


பிறந்து 06 நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பலங்கொடை தள வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

பலங்கொடை – போம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு சிசு பிறந்தது.

பிறந்த நிமிடத்திலிருந்து நேற்று வரை சுவாசிக்க சிசு சிரமப்பட்டுள்ளதை தொடர்ந்து நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சிசு நேற்று மாலை உயிரிழந்திருகிறது.

எனினும் சிசுவின் பெற்றோருக்கு கோவிட் தொற்று இருந்ததா என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.