மற்றுமொரு அத்தியாவசியப் பொருளின் விலையும் அதிகரிப்பு?



பருப்பின் விலை அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் பருப்பின் விலையானது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.