பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் முறைமை தொடர்பில் அவதானம்!



எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும்போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் ஹூசைன் எல் சஹார்டி ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , நாட்டில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு , 20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும்போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்